Tuesday, October 17, 2023

சிந்து சமசவெளிநாகரிக மக்கள் பேசிய மொழி எது? 5200 ஆண்டு பழைய கல்லறையில் எழுத்துக்கள் கண்டுபிடிப்ப.

 சிந்து சமசவெளிநாகரிக மக்கள் பேசிய மொழி எது? 5200 ஆண்டு பழைய கல்லறையில்  எழுத்துக்கள் கண்டுபிடிப்பு


இந்தியாவில் உலகின் ஆரம்பகால நகர நாகரிகங்களில் ஒன்றுக்கு சொந்தமான ஒரு விரிவான கல்லறை தளத்தை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.ஆரம்பகால இந்தியர்கள் எவ்வாறு வாழ்ந்து இறந்தார்கள் என்பதற்கான தகவல்கல் இனிஹ கல்லறையில் தரக்கூடுமா என்பதை பற்றி பதிவு இது.

கடந்த 2019ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு அருகில் உள்ள இந்தியாவின் மேற்கு மாநிலமான குஜராத்தில் அந்த கல்லறை கண்டுபிடிக்கப்பட்டது.குறைந்த மக்கள் தொகை கொண்ட கட்ச் பகுதியில் உள்ள ஒரு தொலைதூர கிராமத்திற்கு அருகில் மணல் மண் குன்று ஒன்றை அகழ்வாராய்ச்சி செய்ய தொடங்கினர்.

ஆரம்பத்தில் அகழ்வாராய்ச்சி தொடங்கிய ஒரு இரு நாளில்  அது ஒரு பண்டைய  குடியிருப்பு பகுதி என்று நினைத்தோம்.ஒரு வாரத்திற்குள் அது ஒரு கல்லறை தளம் என்று உணர்ந்தோம் என்று அகழ்வாராய்ச்சியை வழிநடத்திய கேரள பல்கலைக்கழகத்தை சேர்ந்த தொல்லியல் அறிஞர் ராஜேஷ் எஸ் வி கூறுகிறார்.

மூன்று கட்டங்களாக 150 இந்திய சர்வதேச ஆராச்சியாளர்கள் இந்த 40 ஏக்கர் பரப்பளவிலான தளத்தை அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது.உலகின் ஆரம்பகால நகர நாகரிகங்களில் ஒன்றான சிந்து சமூகத்தை சேர்ந்த குறைந்தது 500 கல்லறைகள் இந்த தளத்தில் இருப்பதாக இப்போது ஆராச்சியாளர்கள் மதிப்பிடுகின்றனர்.

ஹரப்பா நாகரிகம் என்றும் அளிக்கப்படும் இந்த சமூகம் சுமார் 5300 ஆண்டுகளுக்கு முன்பு தற்போதைய வடமேற்கு இந்திய மற்றும் பாகிஸ்தானில் சூடு செங்கல் நாகரிகங்களில் வாழ்ந்த எளிமையான விவசாயிகள் மற்றும் வணிகர்களால் நிறுவப்பட்டது.இந்த நாகரிகம் முதலில் கண்டுபிடிக்கப்பட்டு ஒரு நூற்றாண்டில் இந்தியர் மற்றும் பாகிஸ்தானில் 2000 தளங்கள் வரை ஆரய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர் 


குஜராத்தில் உள்ள கதீய கிராமத்திற்கு அருகில் உள்ள விரிவான கல்லறை தளம் இதுவரை கண்டுபிக்கப்பட்ட இந்த சமூகத்தின் மிகப்பெரிய நகர நாகரிகத்திற்கு முந்தைய கல்லறை தளமாக இருக்கலாம் என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.இது சுமார் 500 ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்ததாக அவர்கள் நம்புகிறார்கள்.இதனால் இங்குள்ள மிகப் பழமையான கல்லறைகள் சுமார் 5200 ஆண்டுகள் பழமையானவை.

இதுவரையிலான அகழ்வாராச்சிகள் ஒரே ஒரு முழுமையான ஆண் மனித எலும்புக்கூட்டையும்,மண்டை ஓடு துண்டுகள்,எலும்புகள் மற்றும் பற்கள் உட்பட பகுதிகளில் பாதுகாக்கப்பட்ட எலும்புக்கூட்டு எச்சங்களை கொடுத்து உள்ளன.

ஆய்வாளர்கள் கல்லறை பொருட்களின் வரிசையையும் கண்டுபிடித்துள்ளனர்.100 கும் மேற்பட்ட வளையல்கள் மற்றும் 27 ஓடுகளால் ஆன மணிகள் ,பீங்கான் பாத்திரங்கள் கிண்ணங்கள்,தட்டுகள்,பானைகள் சிறிய குடங்கள் குவளைகள்,களிமண் பானைகள்,தண்ணீர் கோப்பைகள் மற்றும் ஜாடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.


கல்லறைகளில் தனித்துவமான அம்சங்கள் உள்ளன.இதில் வெவேறு திசைகளில் சுட்காட்டும் கல்லறை குழிகளும் அடங்கும்.சில முட்டை வடிவமானவை,மற்றவை செவ்வக வடிவமானவை.குழந்தைகள் புதைக்கப்பட்ட சிறிய கல்லறைகள் உள்ளன.உடல்கள் மல்லாந்து வைக்கப்பட்டுள்ளன.ஆனால் அமில மண் காரணமாக பெரும்பாலான எலும்புகள் கரைந்துவிட்டன.

இது மிகவும் குறிப்படத்தக்க கண்டுபிடிப்பு என்று மச்சிகனில் உள்ள ஆல்பியன் கல்லுரியில் மானுடவியல் பேராசிரியரான பிராட் சேஸ் கூறுகிறரர்.

இன்றிய பாகிஸ்தானின் பஞ்சாப் பகுதியில் உள்ள சிந்து தளங்களின் முந்தைய அகழ்வாராய்ச்சிகள்  சிந்து மக்களின் கல்லறை வழங்கங்கள் பற்றி சில தகவல்களை வழங்குகின்றன.

எகிப்த் மற்றும் மெசபடோமியாவில் உள்ள மேல் தட்டு மக்களின் இறுதி சடங்குகளைப் போலல்லாமல் இவர்களின் இறுதி இறுதி சடங்குகள் எளிமையானவை.இறந்தவர்களுடன் எந்த நகைகளும் ஆயுதங்களும் வைக்கப்படவில்லை.

இங்கு பெரும்பாலான உடல்கள் துணியால் சுற்றி செவ்வக வடிவிலான மர பெட்டிகளில் வைக்கப்பட்டுள்ளன.கல்லறை குழி பெரும்பாலும்  மண்பாண்ட பொருட்களால் நிரப்பப்பட்டிருக்கும் பின்னர் பெட்டி அதில் இறக்கப்படும் என்று விஸ்கன்சின் மடிசன் பல்கலைக்கழகத்தை சார்ந்த சிந்து சமவெளி  நாகரிகத்தின் அறிஞரான ஜொனாதன் மார்க் கெனோயர் கூறுகிறார்.

கல்லறைகளில் அதிகமான செல்வத்திற்கான எந்த ஆதாரமும் இல்லை. மேலும் அவர்களின் ஆரோக்கியத்தை பொறுத்தவரை சிலருக்கு மூட்டுவலி மற்றும் உடல் அழுத்தத்திற்கான அறிகுறிகள் இருந்தாலும் பெரும்பாலானோர் நன்றாக உணவளிக்கப்பட்ட மற்றும் ஆரோக்யமானவர்களாக இருந்தனர் என்பதை குறிக்கிறது.

ஆனால் குஜராத்தில் உள்ள இந்த மாபெரும் கல்லறை தளத்தின் மர்மம் இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை 

அறிவியலாளர்களுக்கு இந்த கண்டுபிடிப்பு தற்செயலானது.கேரள பல்கலைக்கழக தொல்லியல் மாணவர்கள் குழுவை கிராம தலைவர் ஒருவரை அழைத்து சென்றபோது அவர் அவர்களுக்கு அந்த தளத்தை காண்பித்தனர்.

400 பேர் கொண்ட சிறிய கிராமமான கதியாவிலிருந்து வெறும் 300 மீட்டர் தொலைவில் அது இருந்தது.அவர்கள் தங்கள் வாழவதாரத்திற்கு மழை நீரை நம்பி நிலக்கடலை பருத்தி மற்றும் ஆமணக்கு பயிரிட்டனர்.அவர்களில் சிலரின் பண்ணைகள் கல்லறைக்கு அருகில் இருந்தன.


இப்படி மழைக்கு பிறகு சில மட்பாண்டங்களும் பிற பொருட்களும் மேற்பரப்புக்கு வருவதை பார்க்கலாம்.சிலர் இங்கு பேய்கள் இருப்பதாக  சொல்லுவார்கள்.ஆனால் நாங்கள் இவ்வளவு பெரிய கல்லறைக்கு அருகில் வசிப்பதாக எங்களுக்கு தெரியாது என்று முன்னாள் கிராமத் தலைவர் நாராயண் பாய் ஜஜானி கூறினார்.

இப்போது ஒவொரு ஆண்டும் உலகம் முழுவதிலிருந்தும் ஆராய்ச்சியாளர்கள் எங்கள் கிராமத்திற்கு வருகிறார்கள்.இங்கு புதைக்கப்பட்ட மக்களை பற்றி அறிய முயற்சிக்கிறார்கள்.

குஜராத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சமீபத்திய கல்லறைகளில்  என்ன ரகசியங்கள் உள்ளன இங்கு புதைக்கப்பட்டவர்கள் யார்?


மேலும் இந்தக் கல்லறைகளில் காணப்படும் லாபீஸ் லாசுலி என்னும் நீல கற்கள் தூரத்தில் உள்ள ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்தது என்று கருதும்போது இது நாடோடி பயணிகளுக்கான புனித  கல்லறை தளமாக செய்லபட்டிருக்க முடியுமா ?அல்லது இறந்தவர்களின் எலும்புகள் தனித்தனியாக புதைக்கப்பட்ட இரண்டாம் நிலை கல்லறை தளமாக இது செயல்பட்டிருக்க முடியுமா?

கெனோயர் இந்த கல்லறை தளத்துடன் தொடர்புடைய குடியிருப்புகள் இருக்க வேண்டும்.ஆனால் அவை அதிநவீன குடியிருப்புகளின் கீழ் இருக்கலாம் அல்லது இதுவரை கண்டுபிடிக்கப்படாமல் இருக்கலாம் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்.கல்லறைகள் நன்றாக வரையறுக்கப்பட்ட கல் சுவர்களுடன் கட்டப்பட்டிருப்பது மக்கள் கற்களை கொண்டு கட்டுவதில் தேர்ச்சி பெற்றிருந்ததை குறிக்கிறது.மேலும் இது போன்ற கல் கட்டிடங்கள் மற்றும் சுவர்களால் சூழப்பட்ட குடிருப்புகள் கல்லறை தளத்திலிருந்து 19-30 கிலோமீட்டர் தொலைவில் காணப்பட கூடும். 

சிந்து சமவெளி நாகரிகம் பற்றிய மர்மங்கள் நீடிக்கின்றன.உதாரணமாக இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ள எழுத்துக்கள் இன்னும் புரிந்து கொள்ளப்படவில்லை.இங்கு குளிர்காலத்தில் கதியா அருகேயுள்ள கல்லறைக்கு சென்று ஆராய்ச்சி மேற்கொள்ளலாம் என்று இந்த குழு தீர்மானித்துள்ளது.

பிரபஞ்சம் குறித்த புரிதலை புரட்டிப் போடும் புதிய தகவல்களை வழங்கிய இருண்ட ஆற்றல் ஆய்வு  இருண்ட ஆற்றல் (Dark Energy). இது மிகவும் மர்மமான ஆற்ற...